Skip to main content

அட்சய திருதியை - கும்பகோணம் பெருமாள் திருக்கோயில்களில் கருட ஸேவை

அட்சய திருதியை - கும்பகோணம் பெருமாள் திருக்கோயில்களில் கருட ஸேவை* கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை 

ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3 வது திதியான அட்சய திருதியை 03.05.2022 தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோவில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமிகள் புறப்பட்டு குடந்தை நகரின் டி.எஸ்.ஆர். பெரியகடைதெருவில் அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். 12 பெருமாள் கோயிலின் ஒரு சேர ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதன்படி அட்சய திருதி நாளான 03.05.2022 நேரம் :காலை 9.00 Am முதல்12.30 வரை . *12.வைணவம் திருக்கோயில்* 1.சாரங்கபாணி சுவாமி திருக்கோயில்,2.சக்கரபாணி சுவாமி திருக்கோயில்,3. ராமசுவாமி திருக்கோயில், 4.ஆதிவராக சுவாமிதிருக்கோயில்,5. ராஜகோபால சுவாமி திருக்கோயில்,6. பாட்சாரியார் தெரு கிருஷ்ண சுவாமி திருக்கோயில்,7. வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராம சுவாமி திருக்கோயில் , 8.புளியஞ்சேரி வேணுகோபால் சுவாமி திருக்கோயில் , 9. கொட்டையூர் நவநீத கிருஷ்ண சுவாமி திருக்கோயில்,10 ப்ரம்மன்கோயில் வேதநாராயனன் வரதராஜன் திருக்கோயில் ,11.

தோப்பு தெரு ஸ்ரீராஜகோபாலன் திருக்கோயில்,12. மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி திருக்கோயில்,13. அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், 14. சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராம சுவாமி திருக்கோயில்,15. மல்லுகச்செட்டித் தெரு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில், .ஆகிய கோவில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்கார ஸேவையில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாளும் எழுந்தருளிய 12 கருட சேவை வழக்கமாக  

இந்த உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன் அந்த பெருமாள்களுக்கு முன்பு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளும் நிகழச்சியும் நடைபெறும் .