சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (FIDE) துணைத் தலைவராக இந்திய நாட்டின் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றவர்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் ஃபிடே தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது அணியில் ஆனந்த் உள்ளார்.