Skip to main content

பஞ்சகவ்யம் என்பது என்ன? அதனால் என்ன பலன்?

மேற்கூறிய பொருட்களில் கோமூத்திரத்தில் வருணனும், கோமயத்தில் அக்னியும், தயிரில் வாயுவும், பாலில் சந்திரனும், நெய்யில் சூர்யனும் வசிக்கிறார்கள். இவற்றை முறையாகக் கலந்து துக்கத்துக்குக் காரணமான எந்த பாபம் எனது தோல் மற்றும் எலும்புவரை ஊடுருவியுள்ளதோ அந்த பாபமானது நான் சாப்பிடும் இந்த பஞ்சகவ்யத்தால் நாசமடையட்டும் என்னும் மந்திரம் சொல்லி சாப்பிட வேண்டும். இதனால் பஞ்சகவ்யத்திலுள்ள பாலால் தரித்ரம் (ஏழ்மை) விலகுதல், தயிரால் வம்சம் (குழந்தைகள்) வளர்த்தல், கோமூத்திரத்தால் பாபம் விலகுதல், கோமயத்தால் வியாதி விலகுதல், பசு நெய்யால் அறிவு (ஞானம்) வளருதல் ஆகிய பலன்கள் கிட்டும். ஆகவே சந்தர்பம் கிடைக்கும் போது எல்லாம் மேற்கூறிய முறையில் நாமே பஞ்சகவ்யம் தயார் செய்து சாப்பிடலாம். பாபம் விலகி பரிசுத்தம் ஏற்படும்.