Skip to main content

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

வைகுண்டம் காம்ப்ளக்சில் 33 மண்டபங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று இரவு முதல் 40 மணி நேரத்திற்கு மேலாகக் காத்திருந்தே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடிகிறது.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுமார் 48 மணி நேரத்திற்கு மேலாக ஏழுமலையானை தரிசிப்பதற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் தங்கள் வருகையை பக்தர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .