Skip to main content

”யானை” – மு.பழனிவாசன் ( பகுதி 2)

(யானையைப் பற்றிய முந்தைய கட்டுரையில், அதன் மூதாதை இனமான ”மமூத்” முதல் நம் தமிழகத்தின் சங்ககாலத்தில் யானையின் பெருமைகள் வரை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக…)

மன்னர்களும் யானைகளும்:

    “உலகமகாவீரன் என்று சொல்லப்பட்டுஇந்தியாவின் வடமேற்குப்பகுதிவழியாக ஊடுருவியகிரேக்க நாட்டு மன்னன் அலெக்ஸாண்டர்” தன் படையெடுப்பின்போது போர்க்களத்தில் இந்திய மன்னர்களின் யானைப்படையை கண்டு அஞ்சினான் என்பது வரலாறுஎப்படி ஆடுகள்மாடுகள்குதிரைகள்” ஆகியன ஒரு மன்னனுக்கு வளமோ அதனினும் மேலாக யானைப்படை கூட சிறந்த வளமாகவும்பலமாகவும்கெளரவமாகவும் யானைகள் விளங்கியுள்ளன.

    தமிழகத்தில் சோழர்கள் காலத்தில் யானைப்படை” பெரும் பங்களிப்பு நிக்ழத்தியுள்ளதுமாமன்னன் ராஜராஜசோழனின் ஆணைக்கிணங்க இமயம் வரை படை நடத்திச்சென்ற அவனது மகன் ராஜேந்திர சோழன் இமயம் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியுள்ளான்அவன் கடல் கடந்து சென்று இன்றைய தாய்லாந்துவியட்நாம்இந்தோனேஷியா போன்ற நாடுகளை வென்று சோழர்களின் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தினான் என்கிறது வரலாறுஅவன் அவ்வாறு படைகளை கப்பல்களில் அழைத்துச்செல்லும்போதுதன் கூடவே பலநூறு யானைகளையும் ஏற்றிஅவற்றிற்கான உணவு வகைகளையும் கொண்டு சென்றதோடு மட்டுமின்றிஅவை பெருங்கடலின் சீற்றத்தினைக்கண்டு அஞ்சாமலும்அவற்றிற்கு மதம் பிடிக்காமலும் பார்த்துக்கொண்டு போரில் வெற்றி பெற்று மீண்டும் தாய்த்தமிழகத்திற்கு திரும்பியிருப்பான் என்று கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை!

 

    தமிழகத்தின் சேரபாண்டிய பல்லவ மன்னர்களும்கூட யானையை கெளரவித்துஅவற்றை பேணிப்பாதுகாத்திருக்கின்றனர் என்பதும் கண்கூடு.

யானைகளும் கோவில்களும்:

    ஆன்மீகத்துடன் கணித அறிவியலும் தொடர்புடைய ஜோதிட சாஸ்திரம்” ஒரு கட்டத்தில் எழுச்சியுற்றபோதுஒருவரின் ஜாதகத்தில் கஜகேசரி யோகம்” என்கிற ஒன்று பிரதானமாக விளங்கியதுஇன்றும் கூட அது நடைமுறையில் இருந்து வருகிறதுஅதாவது யானைகள் கூட்டத்தில் ஒரு சிங்கம்போன்று” என்று குறிப்பிடப்படுகிறதுஇதற்கென யாகங்களும் பூஜைகளும் செய்யப்படுகிற வழக்கங்கள் உருவாகியுள்ளனஇதன் அடிப்படையில் இந்த யோஒகம் வலுவாக இருப்பவர்கள் கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்குவதும் உண்டுதமிழ்த்திரையுலகின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தஞ்சைதிருவானைக்காவல் உள்ளிட்ட பல கோவில்களுக்கு யானைகளை தானமாக வழங்கியுள்ளார்அன்னதானம்வஸ்திர தானம்கோ தானம் போன்றவைற்றைப்போலவே கஜ (யானை)தானமும் விசேஷமானதுபோரில் யானைப்படை பயன்படுத்தப்பட்டபோதும்பொதுவாக அக்காலத்தில் பிரமாண்டமான கோவில்களின் கட்டுமானங்கள்பிற கட்டுமானங்கள்உழவுகோவில் பூஜைகள் போன்றவற்றிற்காக யானைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.