Wednesday, May 20, 2026
Homeசெய்திகள்ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஒலித்த அயோத்திதாசப் பண்டிதருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை!

ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலாக ஒலித்த அயோத்திதாசப் பண்டிதருக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை!

தென்னிந்தியாவின் முதல் சாதி எதிர்ப்புப் போராளியும், சிறந்த சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாசப் பண்டிதரின் 181 ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் மலர் தூவி அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார்.

1845 மே 20 இல் பிறந்த காத்தவராயன் என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி, அரசியல் மற்றும் சமூக உரிமைக்காகத் தன் வாழ்நாளெல்லாம் தீவிரமாகப் பாடுபட்டவர். பெரும் கல்விப் புலமை கொண்ட இவரது பாரம்பரியக் குடும்பத்தில் வாழ்ந்த தாத்தா பட்லர் கந்தப்பன்தான், பிரதி எடுக்க ஆள் இல்லாமல் சிதைந்துபோகும் நிலையில் ஓலைச்சுவடிகளாக முடங்கிக் கிடந்த உலகப் பொதுமறையான திருக்குறளைத் தன் குடும்பச் சேமிப்பிலிருந்து மீட்டெடுத்து, அன்றைய ஆங்கிலேய அதிகாரி எல்லிஸிடம் வழங்கி அது அச்சு வடிவம் பெற முழு முதற்காரணமாக விளங்கினார்.

பிற்காலத்தில் சித்த மருத்துவராகவும், சிறந்த எழுத்தாளராகவும் பரிணமித்த அயோத்திதாசர், ‘ஒரு பைசா தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்ததுடன், சமத்துவச் சிந்தனைகளைத் தமிழகத்தில் ஆழமாக விதைத்த மாபெரும் பகுத்தறிவுச் சுடராக வரலாற்றுப் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments