Thursday, February 5, 2026
Homeசெய்திகள்இன்று முதல் அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள்!- முழு விவரம்!

இன்று முதல் அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள்!- முழு விவரம்!

 *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் இன்று முதல் சுங்க கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கார், ஜீப் போன்றவற்றுக்கு சுங்க கட்டணமாக ஒருமுறை பயணிக்க 15 ரூபாயும், பலமுறை பயணிக்க 160 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு ரூ. 155 இருந்தது குறிப்பிடத்தக்கது. 

*இலகுரக வாகனங்கள்(Light vehicles) ஒரு முறை பயணிக்க கட்டணம் ரூபாய் 180லிருந்து 185 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லாரிகள், பேருந்துகள் ஒரு முறை பயணிக்க ரூபாய் 360 லிருந்து 370ஆகவும், இருமுறை பயணிக்க ரூபாய் 540ல் இருந்து ரூபாய் 555 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது..

 *இன்று முதல் டீ, காபி விலை சென்னையில் உயர்கிறது என்று டீக்கடை வியாபாரிகள் சங்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூபாய் 10, 12க்கு  டீ விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இனி 15 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
*ஒரு கப் காபி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 *பால் விலை உயர்வு, காபித்தூள் விலை உயர்வு, டீத்தூள் விலை உயர்வு, போக்குவரத்து செலவு, அதிகரித்துள்ளதால் இந்த நிலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக டீக்கடை வியாபாரிகள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டீ, காபி விலை உயர்த்தப்படுகிறது.

 *எண்ணெய்  நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் கடைகளில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை 51 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வீட்டில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. 

 *எஸ்பிஐ கிரெடிட் கார்டு தனது சில தேர்ந்தெடுக்கப்பட்ட காடுகளுக்கான விதிகளில் இன்று முதல் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதில் குறிப்பிட்ட சில காடுகளுக்கான ரிவார்டு பாயிண்ட்ஸ்(reward points)  திட்டம் திருத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின்படி அந்த கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி பரிசு புள்ளிகளை பெற முடியாது.

 *தபால் துறை இன்று முதல் ரெஜிஸ்டர் போஸ்ட் ஸ்பீட் போஸ்ட் சேவையில் இணைக்க முடிவு செய்துள்ளது. எனவே இன்று முதல் இந்திய அஞ்சல் மூலம் நாட்டுக்குள் நீங்கள் அனுப்பும் எந்த பதிவு தபாலும் ஸ்பீடு போஸ்ட் மூலமே அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments