Wednesday, February 4, 2026
Homeவிளையாட்டு23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் தொடங்கியது !!

23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025 சென்னைவில் தொடங்கியது !!

நவம்பர் 5 முதல் 9, 2025 வரை, சென்னையின் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு மைதானத்தில் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடங்கியது. 

ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (Asia Masters Athletics – AMA) தலைமையிலான ஏற்பாட்டில், Masters Athletics Federation of India – MAFI நடத்திய இந்த மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப், ஆசியா முழுவதிலும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வரும் 35 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் தடகள வீரர்களை ஒன்றிணைக்கும் ஒரு சிறப்பான விளையாட்டுக் கொண்டாட்டமாகும்.

சென்னையின் உலகத் தரத்திலான தடகள அரங்கில் நடைபெறும் இவ்விழாவுடன், மாஸ்டர்ஸ் 10K போன்ற சாலைப்பந்தய நிகழ்வுகளும் இடம்பெறும்.

இந்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் வீரர்கள் 2025 நவம்பர் 5ஆம் தேதிக்குள் 35 வயதைக் கடந்தவர்களாக, மருத்துவ ரீதியாக தகுதியானவர்களாகவும், தங்களது தேசிய AMA உறுப்பினர் சம்மேளனங்களின் மூலம் பதிவு செய்யப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு வீரரும் அதிகபட்சம் நான்கு தனிநபர் துறை (track & field) போட்டிகளில், ஒரு சாலைப்பந்தயத்தில் (10K) மற்றும் இரண்டு ரிலே போட்டிகளில் பங்கேற்கலாம்.

இந்த ஆண்டு நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், இந்தியாவிற்கும் ஆசிய மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். முதன்முறையாக, மொத்தப் பதிவுகள் 3,500-ஐ கடந்துள்ளன, இது ஆசிய மாஸ்டர்ஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் மிகப்பெரிய பங்கேற்பாகும். இந்திய அணியிலிருந்து மட்டும் 2,600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர் — இது எந்தவொரு ஆசிய மாஸ்டர்ஸ் போட்டியிலும் இந்தியாவின் மிகப்பெரிய பங்கேற்பாகும்.

இது இந்தியா மற்றும் ஆசியா முழுவதும் மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் இயக்கத்தின் வலிமை, உற்சாகம் மற்றும் உள்ளடக்கத்தைக் காட்டுகிறது.

தமிழ்நாடு அரசு மற்றும் உள்ளூர் ஏற்பாட்டு குழு, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் அதிகாரிகளுக்கும் உலகத் தரத்திலான வசதிகள், அன்பான வரவேற்பு மற்றும் சீரான போட்டி அனுபவத்தை வழங்க உறுதியுடன் செயல்படுகின்றனர். மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் என்பது வயதை மீறிய விளையாட்டு உற்சாகத்தை பிரதிபலிக்கும் ஒரு தத்துவம் — “வயதுக்கு அப்பாற்பட்ட விளையாட்டு” என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. இந்த 23வது பதிப்பை இந்தியா, குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்துவது, இந்தியாவின் வளர்ந்துவரும் திறனை மற்றும் ஆசிய அளவில் மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

Athletics

இந்த சாம்பியன்ஷிப், போட்டிகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றிணைவு, கலாச்சார பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட ஊக்கத்தை ஊட்டும் நிகழ்வாகும். பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றிணைந்து போட்டியிட்டு, உறவுகள் வளர்த்து, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்வு, மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (AMA) மற்றும் உலக மாஸ்டர்ஸ் அத்லெடிக்ஸ் (WMA) ஆகியவற்றின் நீண்டகால இலக்குகளான “வாழ்நாள் முழுவதும் தடகளம்” என்ற எண்ணத்தை ஊக்குவிக்கிறது.

தமிழ்நாடு அரசு துணை முதல்வரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவை திறந்து வைத்து, சாம்பியன்ஷிப் தொடங்கியதாக அறிவித்தார். மேலும் “ஆசியா முழுவதிலுமிருந்து வந்த மாஸ்டர்ஸ் தடகள வீரர்களின் திறமை, பொறுமை மற்றும் விளையாட்டு மனப்பாங்கை கொண்டாடும் இவ்விழாவை தமிழ்நாடு நடத்துவதில் பெருமை கொள்கிறது.” எனக் கூறினார். பிரபல திரைப்பட நடிகர் திரு. ஆர்யா இவ்விழாவின் பிராண்ட் தூதராக (Brand Ambassador) கலந்து கொண்டார்.

Athletics

இந்நிகழ்வினில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள்:

திரு. மா. சுப்பிரமணியன் – சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
திரு. பி. கே. சேகர் பாபு – இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
சென்னை மாநகர மேயர் திருமதி பிரியா
திரு. அதுல்ய மிஸ்ரா, ஐ.ஏ.எஸ் – கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு
திரு. ஜே. மேகநாத் ரெட்டி, ஐ.ஏ.எஸ் – உறுப்பினர் செயலாளர், SDAT
திருமதி எச். டோரோத்தி ஷீலா – தலைவர், MAFI
திருமதி மார்கிட் யங்மேன் – தலைவர், WMA
திரு. வி. விக்ரந்தனோரோஸ் – தலைவர், AMA
திரு. டபிள்யூ.ஐ. தவரம், ஐ.பி.எஸ் – தலைவர், MAFI
திரு. ஜுவான் ஓர்டோனெஸ் – செயலாளர், AMA
திரு. எஸ். சிவப்பிரகாசம் – செயலாளர், AMA
திரு. எம். செண்பகமூர்த்தி – தலைவர், MAFI
டாக்டர் தரம் வீர தில்லோன் – தலைவர், ஏற்பாட்டு குழு
திரு. டி. டேவிட் பிரேம்நாத் – ஏற்பாட்டு செயலாளர்

Athletics

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments