Wednesday, May 20, 2026
Homeசெய்திகள்போலி டாக்டர் பட்டமா? TVK எம்.எல்.ஏக்கள் மீது பெரும் சர்ச்சை!

போலி டாக்டர் பட்டமா? TVK எம்.எல்.ஏக்கள் மீது பெரும் சர்ச்சை!

தமிழகத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தைச் (TVK) சேர்ந்த முதன்முறை சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) பலர், தங்களின் கல்வித் தகுதிகள் மற்றும் கௌரவப் பட்டங்களைப் போலி விளம்பரங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ பிரமாணப் பத்திரங்களில் (Affidavit) உள்ள கல்வித் தகுதிக்கும், தேர்தல் பிரச்சாரப் போஸ்டர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்களில் அவர்கள் விளம்பரப்படுத்திய தகுதிகளுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடுகள் இருப்பது தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. இதன்படி, கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் மற்றும் ஆவடி எம்.எல்.ஏ ஆர். ரமேஷ் குமார் ஆகியோர் முறையே பி.ஏ., பி.எல் மற்றும் பி.ஏ பட்டங்கள் மட்டுமே பெற்றிருந்தும் தங்களின் பெயருக்கு முன்னால் ‘டாக்டர்’ (Dr) என்ற பட்டத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது;

இதேபோல் விருதுநகர் எம்.எல்.ஏ பி. செல்வம் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ மட்டுமே முடித்துவிட்டு ‘டாக்டர் செல்வம்’ என்றும், போளூர் எம்.எல்.ஏ ஆர். அபிஷேக் ஒருங்கிணைந்த எம்.எஸ் பட்டம் மட்டுமே பெற்றுவிட்டு கூடுதலாக ‘எம்பிஏ’ (MBA) என்றும், தாம்பரம் எம்.எல்.ஏ டி. சரத்குமார் பிபிஏ மட்டுமே படித்துவிட்டு ‘எம்பிஏ பட்டதாரி’ என்றும் தவறாகப் புரொஜெக்ட் செய்துள்ளனர்.

மேலும், குமாரபாளையம் எம்.எல்.ஏ சி. விஜயலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு பிகாம் (B.Com) பட்டதாரி போலக் காட்டியதும், அம்பத்தூர் எம்.எல்.ஏ ஜி. பாலமுருகன் வெறும் பத்தாம் வகுப்பு மற்றும் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு மட்டுமே வைத்துள்ள நிலையில் தொழில்நுட்ப டிப்ளமோ முடித்ததாக விளம்பரப்படுத்தியதும் சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிடமிருந்து ரூ. 15,000 முதல் ரூ. 45,000 வரை பணம் கொடுத்து வாங்கப்படும் கௌரவ டாக்டர் பட்டங்களை மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தவறாகப் பயன்படுத்துவது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்றும், அரசியலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை பற்றிப் பேசும் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments