தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் ஏராளமான கோயில்கள் உள்ளன. அதிலும், நவகிரகத்திற்கு என தனித்தனியாக கோயில்கள் உள்ளன. அதிலும், சனிஸ்வரன் என்றால் திருநள்ளார் என எல்லாருக்கும் நினைவிற்கு வரும், அதே டெல்டா மாவட்டத்தில் உள்ள திருவாரூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கொள்ளிக்காடு. இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் அக்னீஸ்வரர். திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் ஆலயம் சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான ஆலயம்.
நவக்கிரகங்களில் மிக மிக முக்கியமானவ ராக வணங்கப்படுபவர் சனீஸ்வர பகவான். வேறு எந்தத் தெய்வத்துக்கும் ஈஸ்வரப் பட்டம் இல்லை. ஆனால் சனிக்கு மட்டுமே ஈஸ்வரப் பட்டமும் இணைந்து அழைக்கப்படுகிறது.

