Wednesday, February 4, 2026
Homeசினிமா"அமரன்" IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு!

“அமரன்” IFFI 2025-இன் இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாகத் தேர்வு!

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட “அமரன்” திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மதிப்புமிக்க தேர்வு, “அமரன்” பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில்  இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது.

இதுமட்டுமின்றி, “அமரன்” திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக “அமரன்” இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது.

Amaran

IFFI 2025-இல் “அமரன்” திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். படக்குழு, நவம்பர் 21, 2025 அன்று நடைபெறும் விழாவின் திரையிடல் நிகழ்வில் பங்கேற்க கோவாவுக்கு பயணிக்கின்றனர்.

மேஜர் முகுந்த் வரதராஜன் (அசோக சக்ரா), அவர்களின் அசாதாரண உண்மைக்கதையால் ஈர்க்கப்பட்ட
“அமரன்” நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை தேசபக்தி, தியாகம் மற்றும் அசைக்க முடியாத தைரியத்தை காட்சிப்படுத்தியத்தின் மூலம் நெகிழச் செய்துள்ளது. இந்தத் திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசத்திற்கான உயர்ந்த சேவையை போற்றுகிறது மற்றும் அவரது பாரம்பரியத்தை ஆழமான  மற்றும் மிகச் சிறந்த சினிமா கதையாக்கத்தின் மூலம் முன்னிலைப்படுத்துகிறது.

Amaran

IFFI 2025-இன் தொடக்கத் திரைப்படமாக “அமரன்” தேர்வு செய்யப்பட்டது, அதன் படைப்பு திறன், தொழில்நுட்ப சிறப்பு மற்றும் உணர்ச்சி ஒத்திசைவுக்கு சாட்சியாக நிற்கிறது. இது திரைப்படத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்திய ஆயுதப்படைகளின் வீரம் மற்றும் இந்திய கதைசொல்லலின் நீடித்த கொண்டாட்டம் ஆகும். 

இந்தியாவின் மிகப்பெரிய சினிமா அங்கீகாரத்துடன், “அமரன்” தனது ஊக்கமளிக்கும் பயணத்தை ஒரு தலை சிறந்த சினிமா படைப்பாகவும், தேசிய வீரருக்கு அஞ்சலியாகவும் தொடர்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments