Friday, June 26, 2026
Homeசெய்திகள்அண்ணா நூற்றாண்டு நூலக வாடகை 4 மடங்கு உயர்வு – இலக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

அண்ணா நூற்றாண்டு நூலக வாடகை 4 மடங்கு உயர்வு – இலக்கிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் (Anna Centenary Library) இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதற்கான வாடகைக் கட்டணத்தைப் புதிய அரசு ஜூலை முதல் அதிரடியாக உயர்த்தியிருப்பது, தமிழ் மொழி மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு அரும்பாடுபடும் அமைப்புகள் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும், கடும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு வெறும் 3,000 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை, தற்போது எவ்வித நியாயமுமின்றி ஒரே அடியாக 12,000 ரூபாயாகப் புதிய அரசு நால மடங்கு உயர்த்தியிருப்பது, லாப நோக்கமின்றிச் செயல்படும் சிற்றிதழ்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் முற்போக்கு இலக்கியச் சூழலுக்குக் கழுத்தை நெரிக்கும் பெரும் சுமையாகும்.

வணிக ரீதியிலான மாநாடுகளுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொண்டாட்டங்களுக்கும் இணையாக, கல்வி, மொழி, கலாச்சார வளர்ச்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளிடமும் இப்படிப் பகற்கொள்ளையாகக் கட்டணத்தை வாரிச் சுருட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்ற காட்டமான கேள்வி எழுகிறது; ஏழை எளிய மாணவர்களும், சாதாரணத் தமிழ் ஆர்வலர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒரு பொது நூலக இடத்தைக் கூட இப்படித் தாராளமாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பது போல் வணிகமயமாக்குவது கண்டனத்திற்குரியது.

எனவே, அரசு இந்தத் தன்னிச்சையான மற்றும் மக்கள் விரோதக் கட்டண உயர்வை உடனடியாக மறுபரிசீலனை செய்து, இலக்கியத்தை ஊக்குவிக்கவும் கலாச்சாரத்தைக் காக்கவும் ஏதுவாக, இத்தகைய அறிவுசார் பொது இடங்கள் அனைவருக்கும் எளிதில் அணுகக்கூடிய பழைய குறைந்த கட்டணத்திலேயே கிடைப்பதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments