பிரதமர் மோடி கேரளாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
எர்ணாகுளம் மாவட்டத்தில் ஆதி சங்கராச்சாரியாரின் பிறந்த ஊரான காலடி கிராமம் உள்ளது. இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று கேரளா வந்தார்.
மாலையில் காலடி கிராமத்திற்கு வந்து சேர்ந்த அவர், ஆதிசங்கரர் ஜென்மபூமியில் தரிசனம் செய்தார்.

