அதிமுகவில் மீண்டும் சசிகலா- மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான்
அ.தி.மு.க.வில் மீண்டும் சசிகலாவை இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கட்சிக்குள் உள்ள பிளவே தேர்தல் தோல்விக்கு காரணம் என தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தொண்டர்களின் கோரிக்கையை தீர்மானமாக ஓ.பி.எஸ். இடம் வழங்கியுள்ளோம். தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முடிவு எடுப்பதாக ஓ.பி.எஸ். உறுதியும் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, சசிகலா – தினகரன் இருவரையும் கட்சியில் இணைத்தால் பிரச்சனை தீர்ந்துவிடும் எனவும் தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையது கான் தெரிவித்தார்.

