அ. ம.மு.க. நிறுவன தலைவர் டிடிவி தினகரன் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் மக்கள்தான் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்
பாஜகவை வைத்துக் கொண்டு எல்லா பலனையும் அனுபவித்த எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் நேரத்தில் அக்கட்சிக்கு துரோகம் செய்கிறார். துரோகம் செய்வது அவரது இயற்கையான சுபாவம்தான். முதலில் அவரை முதல்வராக்கியவர்களுக்கு துரோகம் செய்தார். இப்பொழுது ஆட்சியை காப்பாற்றி கொடுத்த பாஜக-விற்கு துரோகம் செய்கின்றார்.

