சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டு வெள்ளநீரும் கழிவுநீரும் சூழ தவித்துக்கொண்டிருக்கும் தரமணி, வேளச்சேரி மற்றும் தி.நகர் பகுதிகளை Kamal Haasan ஆய்வு செய்தார்.
அங்கிருந்தபடியே அப்பகுதிக்கு உட்பட்ட அரசு அதிகாரியை தொடர்புகொண்டு உடனடியாக நிலைமையை சீர்செய்ய வேண்டி கோரிக்கை விடுத்தார்.
அதனையடுத்து அங்கு வசிக்கக்கூடிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

