தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. சார்பில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டரில் ‘‘பட்ஜெட் மீதான முழு விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது.
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, சட்டமன்ற நேரலை ஒளிபரப்பை நாளை முதலாவது தொடங்க தமிழக முதல்வர் ஆவன செய்யவேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

