Thursday, August 13, 2026
Homeசெய்திகள்எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை ‘வாட்டர் மெட்ரோ’! – CMRL புதிய திட்டம்!

எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை ‘வாட்டர் மெட்ரோ’! – CMRL புதிய திட்டம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL), எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் வழித்தடத்தில் ‘வாட்டர் மெட்ரோ’ (Water Metro) திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கத் தற்போது டெண்டர் கோரியுள்ளது. கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தைப் போல, சென்னையின் நீர்நிலைகளைப் பயன்படுத்திப் படகுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த முன்னோடித் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே படகு முனையங்கள் அமைப்பது, நீர்வழிப்பாதையைச் சீரமைப்பது மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும்.

எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான நீண்ட தூரச் சாலைப் போக்குவரத்துக் நெரிசலைக் குறைக்கவும், சூழலியல் சார்ந்த புதிய சுற்றுலாப் பாதையை உருவாக்கவும் இத்திட்டம் பெரிதும் உதவும். அனைத்துக் கட்ட ஆய்வுகளும் நிறைவடைந்த பின்னரே இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு மற்றும் படகுகளின் இயக்கம் குறித்த முழு விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments