Wednesday, February 4, 2026
Homeசெய்திகள்மனோன்மணியம் சுந்தரனார் பட்டமளிப்பு விழா சம்பவம்: ஸ்டாலின் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்? அண்ணாமலை காட்டம்!

மனோன்மணியம் சுந்தரனார் பட்டமளிப்பு விழா சம்பவம்: ஸ்டாலின் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்? அண்ணாமலை காட்டம்!

தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக கவர்னர் செயல்படுவதால் அவர் கையால் பட்டம் வாங்க மாணவி ஜீன் ஜோசப் மறுப்பு. 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார்.

காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்? என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments