தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினரும், பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும் உலக நாயகனுமான கமல்ஹாசன் அவர்கள் பாராளுமன்ற ( ராஜ்ய சபை) உறுப்பினராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரை உலகில் நுழைந்து இந்த வருடம் 50 வது வருடமாகிறது. தொடர்ந்து நாயகனாக பயணித்து ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள அவருக்கு இந்த செயற்குழு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது.
தென்னாட்டு ஜேம்ஸ் பாண்ட் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவரும், தயாரிப்பாளர்களின் கதாநாயகனுமான மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் வசித்த வீட்டின் தெருவிற்கு
” மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் தெரு ” என பெயர் சூட்டி அவரது புகழுக்கு மேலும் மெருகேற்றிய, தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கும், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சமூக வலைத்தளங்களில் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு முக்கிய திரையரங்கில் Online Ticket விற்பனை கணக்கு வழக்குகளை, சம்பந்தப்பட்ட திரையரங்கினர், மறைத்து, அவர்கள் வேறு ஒரு கணக்கினை தவறாக காட்டியிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை செய்ததில் பல்வேறு திரைப்படங்களுக்கும் இதே போல் கணக்கு வழக்குகளை மாற்றி தவறான தகவல்களை மட்டுமே அளித்துள்ளார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இதுபோன்று தவறுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்து திரையரங்குகளிலும் Ticket வழங்கும் முறையை தமிழ் நாடு அரசே கணினி மயமாக்கப்பட வேண்டும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கவனத்திற்கு கொண்டு சென்று Online Ticket Centralised Server அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம்.
அதே கோரிக்கையை மீண்டும் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடத்தில் நேரில் சென்று வலியுறுத்தி உடனடியாக அமல்படுத்த வேண்டுகோள் வைக்கப்படும். மேலும் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு உரிய நிவாரணத்தை அந்த திரையரங்கினரிடம் இருந்து பெற்று தர வழிவகை செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

