நம் முன்னோர்கள் இயற்கை மூலிகைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தி வந்தனர், அவற்றில் குப்பைமேனி மிக முக்கியமானது. பல்வேறு நோய்களிலிருந்து தங்களை பாதுகாக்க இதனை பயன்படுத்தினர். இந்த பதிவில் குப்பைமேனியின் மருத்துவ பயன்களை ஆராய்வோம். உடலில் உள்ள கழிவுகள் சரிவர வெளியேறாமல் இருப்பது பல பிரச்சனைகளுக்கு முதல் காரணம். இவை சிறுநீரகம், மலம், வேர்வை ஆகியவற்றின் மூலம் வெளியேறும்; இவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் பெரிய பாதிப்புகள் உருவாகும்.
உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் இருந்தால், அவை ரத்தத்தில் கலந்து தோல் நோய்களை உண்டாக்கும்.
இந்த பதிவில் குப்பைமேனியை பயன்படுத்தி தோல் நோய்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதை காண்போம்.
குப்பைமேனி இலைச்சாறு, மஞ்சள் தூள், சீரகத்தூள் கலந்து குழந்தைகளுக்கு உணவுக்கு முன் கொடுத்தால், சளி இருமல் தொந்தரவு நீங்கும்.

முகப்பருக்களை நீக்க, துளசி, வேப்பிலை, குப்பைமேனி இலைகளை பன்னீரில் ஊற்றி அரைத்து, முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து கழுவினால் முகப்பரு நீங்கும். இதை வாரம் இரு முறை செய்ய வேண்டும். தலையில் பொடுகு நீங்க, குப்பைமேனி, வேப்ப இலைகளை அரைத்து தயிருடன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து குளித்தால் பொடுகு நீங்கும்.
வயிற்று புழுக்கள் நீங்க, குப்பைமேனி இலை சாறுடன் பூண்டு சாரை கலந்து மூன்று மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட்டு வர வேண்டும்.
முகத்தில் முடிகள் நீங்க, குப்பைமேனி இலை பவுடர், கஸ்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு பொடிகளை கலந்து முகத்தில் பூசி வர வேண்டும்.
சொறி, சிரங்கு நீங்க, குப்பைமேனி இலை பொடியை உடலில் தேய்த்து குளித்து வர, சருமம் பொலிவு பெறும். ஆறாத புண்கள் குணமாக, குப்பைமேனி இலைச்சாறு பயன்படுத்த வேண்டும்.
குப்பைமேனி இலைகளையும் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் வதக்கி, வடிகட்டி சேமிப்பது சாரி, சிரங்கு, தேமல், புண் மற்றும் காயங்கள் மீது தடவும்போது குணமாகும். மலச்சிக்கல், மூட்டு வலி, உடல் சோர்வு உள்ளவர்கள் குப்பைமேனி இலை பொடியை சுடுநீரில் கலந்து குடித்து வர, உடல் ஆரோக்கியம் பெறும்.
நம் வீட்டு தோட்டங்களிலும், வயல் வழிகளிலும் வளர்ந்திருக்கும் குப்பைமேனியை நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, பல நன்மைகளை பெற்று இன்புற்று வாழலாம்.
