ராமநாதபுரத்தில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 60வது குருபூஜை விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கமுதியில் நடைபெறும் இவ்விழாவில் கலந்துகொள்வதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை அக்டோபர் 21ம் தேதி மாலை 5.45க்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கூறியுள்ளார்.

