வள்ளலாரின் சித்துக்கள்:
நாகத்தின் கட்டுப்பாடு:
வள்ளலார் அவர்கள் சித்த தன்மையில் உச்சத்தில் இருந்தமைக்கு பல்வேறு சான்றுகள் அவர் வாழ்நாளில் சில நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டின. சென்னை பெரம்பூர் பகுதியில் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு அவர் வழியில் குறுக்கிட்டபோது, ”இவ்விடம் விட்டு செல்” என்றுகூற, அவரது ஆணையை ஏற்று அந்நாகம் அவ்விடம் விட்டு நகர்ந்தது.
ஒருமுறை அவரது அன்பர் ஒருவருக்கு நாகத்தினால் துன்பம் நேரவிருந்தபோது, “என்னைத் தீண்டாதே… இராமலிங்கத்தின் மீது ஆணை” என்றுகூற, அது அப்படியே செயலற்று திரும்பிச்சென்றது.

