ஜப்பான் நாட்டை தலைமையிடமாக கொண்ட ஹோண்டா, உலகம் முழுவதும் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடுகிறது, குறிப்பாக இந்தியாவில் இரு சக்கர வாகன சந்தையில் தனி முத்திரை பதிக்கும் நிறுவனமாக ஹோண்டா உள்ளது. தற்போது இந்திய வாகன சந்தையில் 28% சந்தை பங்கை ஹோண்டா நிறுவனம் கொண்டுள்ளது.
அதாவது கடந்த நிதியாண்டில் (2024-25) மட்டும் இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்தின் 58 லட்சம் இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டன. இந்த நிலையில் வருகிற 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவின் சந்தை மதிப்பு பங்கு 30 சதவீதமாக உயர்த்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய மோட்டார் சைக்கிள், வாகனங்கள், ஈ-கூட்டார்கள் மற்றும் மொபட்களை தயாரித்து விற்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

