ஐ.டி ரீஃபண்ட்டுக்காக காத்திருப்பவர்களை குறிவைத்து, டிஜிட்டல் பண மோசடி கும்பல்கள் களமிறங்கி இருப்பதாக தெரிகிறது.
ரீஃபண்ட் பெற ஒப்புதல் அளிப்பதாகக் கூறி, கிரெடிட் கார்டு போன்ற தகவலைக் கேட்டு மெசேஜ்களை சிலர் அனுப்புகின்றனர். அதில் உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்தால், கணக்கில் இருந்து பணத்தை உரியவருக்குத் தெரியாமல் திருடி விடுகின்றனர். எனவே, ஐ.டி பெயரில் வரும் மெசேஜ்களை ஓபன் செய்யாமல் இருங்கள்.

