இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கப்பட்ட நாளை, கறுப்பு தினமாக அனுசரிக்க பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்தனர்.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஸ்ரீநகர் உட்பட பல இடங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர் ராஜ்ஜியத்தின் ராஜாவாக இருந்தவர் ஹரி சிங்.
கடந்த 1947 அக்டோபர் 26-ம் தேதி அப்போதைய இந்திய கவர்னர் ஜெனரல் மவுன்ட் பேட்டனுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன்படி ஜம்மு காஷ்மீர் ராஜ்ஜியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. இது அக்டோபர் 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்நாளை மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் இணைப்பு தினமாகக் கொண்டாடி வருகிறது.

