ஒருவர் காய்ச்சலின் போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையாக இருக்கிறது. ஏனென்றால் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்படக்கூடிய நீர் இழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும் என்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் உடலில் குளிர்ச்சி தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்கும். இந்த இளநீர் காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும். அதேபோல் இளநீரை அதிக அளவில் குடிக்க கூடாது. அதில் சோடியம் அதிகமாக இருப்பதால் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.

