பெண் காவலர் பற்றி அவதூறாக பேசியதாக, சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி காவல் சார்பு ஆய்வாளர் மகேஸ்வரி கொடுத்த வழக்கில், பிரபல டியூபர் சவுக்கு சங்கர் இன்று சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அப்ரின் பேகம் ஜாமீனில் விடுவித்தார். பின்னர் வெளியே வந்த சவுக்கு சங்கர், *”நான் தினசரி புதுப்புது வழக்குகளில் கைது செய்யப்படுவதற்கு காரணம் உதயநிதி ஸ்டாலின் தான்.
உதயநிதி ஸ்டாலின் நடத்தும் கார் பந்தயங்கள் முடிவுப் பெறும் வரையில், என்னை வெளியில் வரவிடாத அளவிற்கு தினசரி என் மீது புதிய புதிய அவதூறு வழக்குகள் பதியப்பட்டு வருகிறது என்று குற்றம்சாட்டியபடியே சென்றார்.

