Home Uncategorized கிராம சபை கூட்டம் தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்

கிராம சபை கூட்டம் தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு, நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்கு என்ற தலைப்பில் நடைபெறும் இக்கூட்டத்தில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே செங்காடு கிராமத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
 

Exit mobile version