கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் டிஐஜி மற்றும் எஸ்.பி உள்ளிட்ட 55 காவலர்கள் வன்முறையின்போது காயம் அடைந்துள்ளனர் எனவும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

