நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது.
இங்கு ஆண்டு தோறும், ஆடி 18ல், வல்வில் ஓரி விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.
வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா மற்றும் மலர் கண்காட்சி துவக்க விழா நேற்று (ஆகஸ்ட் 2) நடந்தது.
குழந்தைகள், பெரியவர்களை கவரும் வகையில் வில், அம்பு, மற்றும் காய்கறிகளைக் கொண்டு செஸ் ஒலிம்பியாட் சின்னம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

