Friday, March 6, 2026
HomeUncategorizedகொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் அங்காடிகளுக்கு தடை 

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் 9 இடங்களில் அங்காடிகளுக்கு தடை 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அங்காடிகள் செயல்பட தடை.  

வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை அங்காடிகள் இயங்க அனுமதி இல்லை. 

புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை வணிக வளாகம் அங்காடிகளுக்கு தடை.

சென்னையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனத்திற்கு தடை விதிப்பு.

வடபழனி, கந்தக் கோட்டம், சூளை அங்காள பரமேஸ்வரி, படவேட்டம் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களுக்கு தடை.

நாளை முதல் 9 ம் தேதி வரை தடை தொடரும்.

ஜாம்பஜார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை மற்றும்

என்எஸ்சி போஸ் சாலை குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை வணிகவளாகம் அங்காடிகளுக்கு தடை.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments