Monday, March 16, 2026
HomeUncategorizedகடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

கடன்களை தள்ளுபடி செய்த கேரள வங்கி

வயநாட்டில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தோர், உடமைகளை இழந்தோர், வீடுகளை இழந்தோரின் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது கேரள வங்கி.

கேரள வங்கி சார்பில் நடத்தப்பட்ட நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரள வங்கி முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்குவதாகவும், கேரள வங்கியின் வங்கி ஊழியர்களும் தானாக முன்வந்து தங்களது ஐந்து நாள் சம்பளத்தை நிதிக்கு வழங்குவதாக அறிவித்தனர்.

கேரள வங்கி என்பது கேரள மாநில அரசிற்கு சொந்தமான கூட்டுறவு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நடத்தும் கேரளா வங்கி (அனைத்து கூட்டுறவு வங்கி) சுமார், ரூ.6,65,000 கடனை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments