கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது
தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். வெப்பநிலை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் வெப்ப அலையும் வீசி வருகிறது இதனால் கூடுதல் அவதி.
இது வரக்கூடிய நாட்களில் அதிகரித்து காணப்படும் என்றும், 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும் என்பதால் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இன்று திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கருர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 18 வடக்கு உள் மாவட்டங்களில் இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய 24 மாவட்டங்களில் இயல்பை விட வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்து காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.