சிறையில் பிறந்து
இன்னலைத் தாங்கினான்…
பாலக வயதில்
பரவச மூட்டினான்…
வெண்ணையைத் திருடி
குறும்புகள் செய்தான்…
இசையின் மகிமையை
உயர்த்திக் காட்டினான்…
சிறுவனா யிருந்து
வதங்களைச் செய்தான்…
வாலிப வயதில்
வலிமையைக் காட்டினான்…
வயிற்றில் சுமந்தவள்
பெருமையைச் சொன்னான்…
நெஞ்சில் சுமந்தவளின்
புகழினைச் சொன்னான்…
மன்னனா யிருந்து
மாண்புகள் செய்தான்…
நண்பனாயிருக்கும்
பண்பினைச் சொன்னான்…
கண்ணியமா யிருக்கும்
காதலைச் சொன்னான்…
மைத்துனனா யிருந்து
மேன்மைகள் காட்டினான்…
தூதனா யிருந்து
நல்லவை சொன்னான்…
தோ¢னை யோட்டி
சேவையும் செய்தான்…
உறவின் தத்துவம்
உண்மையாய்ச் சொன்னான்…
தர்ம வாழ்வினைத்
தலைமையாய்ச் சொன்னான்…
கீதையை மொழிந்து
தத்துவம் சொன்னான்…
சரணாகதி தத்துவம்
சாதுர்யமாய்ச் சொன்னான்…
முற்பிறவிப் பயனை
மரணத்தில் சொன்னான்…

