Thursday, February 5, 2026
HomeUncategorizedசென்னை மேடவாக்கம் பக்த ஜெய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை மேடவாக்கம் பக்த ஜெய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்!

சென்னை மேடவாக்கத்தில் பெருமாள் நகர், சிவகாமி நகரில்  அமைந்துள்ள பக்த ஜெய ஆஞ்சநேயர் கோயில், அந்த பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோயில் ஆகும். இந்த ஆஞ்சநேயர் அந்த பகுதி மக்களுக்கு ஒரு கண் கண்ட தெய்வமாக கேட்கும் வரங்களை கொடுக்கும் தெய்வமாக காட்சியளிக்கிறார்.

 20 வருடங்களுக்கும் மேலாக இந்த பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பக்த ஜெய ஆஞ்சநேயரை தொடர்ந்து வழிபட்டு தங்கள் நேர்த்திக்கடன்களை, பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் ஸ்ரீ பக்த ஜெய ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜூலை 13 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை நடைபெற உள்ளது.

 இதற்கான திருப்பணிகள் தற்போது தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணியில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு பக்த ஜெய் ஆஞ்சநேயர் காரிய கமிட்டி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. தங்களுடைய நன்கொடைகளை மேற்குறிப்பேற்றுள்ள மூன்று எண்களில் (80560 24345) இந்த நம்பரில் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆஞ்சநேயர் ஸ்ரீ பக்த ஜெயா ஆஞ்சநேயர் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திக்கிறோம்.
 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments