Wednesday, July 29, 2026
Homeசெய்திகள்மதுரை மாநகராட்சியின் ரூ.6,150 கோடி வளர்ச்சி திட்டம் அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பு!

மதுரை மாநகராட்சியின் ரூ.6,150 கோடி வளர்ச்சி திட்டம் அரசின் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பு!

மதுரை மாநகராட்சியில் மழைநீர் தேங்குவது மற்றும் பாதாளச் சாக்கடை (UGD) பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, ரூ.6,150 கோடி மதிப்பிலான விரிவான திட்ட வரைவை (Proposal) மாநகராட்சி நிர்வாகம் தமிழக அரசிற்குச் சமர்ப்பித்துள்ளது.

நகரில் லேசான மழைக்கே பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் 189 இடங்களைக் கண்டறிந்து, புதிய மழைநீர் வடிகால்களை அமைத்து அருகிலுள்ள கால்வாய்களுடன் இணைக்க ரூ.3,000 கோடியும், பழைய 72 வார்டுகளில் பழுதடைந்துள்ள பாதாளச் சாக்கடை கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைப்பதற்கு ரூ.3,100 கோடியும் ஒதுக்கித் திட்டமிடப்பட்டுள்ளது.

இவற்றுடன், வைகைக் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையப் புனரமைப்பு, சந்தைப் பகுதிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காகக் கூடுதல் நிதியும் கோரப்பட்டுள்ளது.

முதற்கட்டமாகச் சிறப்பு ஒதுக்கீடாகக் கிடைத்த நிதியைக் கொண்டு மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய மண்டலங்களில் வடிகால் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசின் ஒப்புதல் கிடைத்ததும் முழுவீச்சிலான மறுசீரமைப்புப் பணிகள் முடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments