தீர்மானம் 1 – திருப்பரங்குன்றத்தில் வரும் கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். தீர்மானம் 2 – பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்ரேசன் சிந்தூரை நடத்திய பிரதமருக்கு நன்றி.
இந்து முன்னணி சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. இதில், முருக பக்தர்கள் மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதில், ஆந்திர துணை முதல்வரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பங்கேற்று பேசினார். மேலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் மடாதிபதிகள், உட்பட லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

