நீலாங்கரையில் உள்ள சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி திமுக அலுவலகத்தில்,
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி திரு உருவசிலையை திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

