முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான முடிவுகள் கடந்த ஜூன் 1 ஆம் தேதி வெளியானது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.
முதுநிலை நீட் தேர்வுக்கான விடைத்தாள், வினாத்தாளை வெளியிடாத மருத்துவ தேசிய தேர்வு வாரியத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பட்டியலிட மனுதாரர் கோரினர்.
இந்த வழக்கை இன்று(ஆக.,29) விசாரித்த போது, நீட் முதுநிலை கவுன்சிலிங்கிற்கு தடை விதிக்க வேண்டாம்.
நீட் முதுநிலை கவுன்சிலிங் திட்டமிட்டபடி நடக்கட்டும்.
இனி அதை நிறுத்த வேண்டாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அமர்வு உத்தரவிட்டது.

