விவாகரத்து வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆஜர். விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தனுஷ் ஐஸ்வர்யா வாக்குமூலம் விவாகரத்து வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் – நீதிமன்றம்
விவாகரத்து வழக்கில் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் ஆஜராகினர். கடந்த 3 முறை விசாரணைக்கு அழைத்தும் தனுஷ் – ஐஸ்வர்யா ஆஜராகாத நிலையில், இன்று இருவரும் நேரில் ஆஜராகி உள்ளனர். இதையடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் நவ.27-ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை குடும்ப நல நீதிமன்றம்.

