நம்பெருமாள் சவுரி தொப்பாரக் கொண்டையுடனான சிகை அலங்காரம், முத்துச்சரம், காசுமாலை, ரத்தின அபயஹஸ்தம், முதுகில் முத்து சட்டை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

