தமிழகத்தில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட உள்ள நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசுகையில்
ஒவ்வொரு பள்ளிக்கூடங்களும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க அறிவுறுத்தி இருக்கிறோம். கண்டிப்பாக மாணவர்கள் முக கவசம் அணிந்துவர கூறியிருக்கிறோம். அவர்கள் அணிந்துவர மறந்துவிட்டாலோ, அணிந்து வந்த முக கவசம் சேதம் அடைந்துவிட்டாலோ பள்ளிகளில் வழங்க அறிவுறுத்தியுள்ளோம்.

