பந்தளம் அரசு குடும்பத்தைச் சேர்ந்த அம்பிகா தம்புராட்டி (76) இன்று அதிகாலை காலமானார் .
இதன் காரணமாக பந்தளம் அரண்மனை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் 11 நாட்களுக்கு மூடப்பட்டு ஜனவரி 17ஆம் தேதி புதன்கிழமை கோவில் மீண்டும் திறக்கப்படும் சபரிமலை சன்னிதானத்திற்கு பந்தளம் அரண்மனையில் இருந்து திரு ஆபரணங்கள் எடுத்துச் செல்லப்படும் போது அரசு குடும்பத்தினர் யாரும் அதில் பங்கேற்க மாட்டார்கள்.
திரு ஆபரணங்கள் சபரிமலை செல்வதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பந்தள அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

