புதுக்கோட்டை கம்பன் கழகத்துக்கு விருது வழங்கப்பட்டது. சென்னை மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் சார்பில் புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் செயல்பாடுகளைப் பாராட்டி நேற்று காரைக்குடியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ‘திருக்குறள் நெறிச் சுடர்’ என்ற விருதை உயர் நீதிமன்ற நீதி அரசர் மாண்புமிகு அ.நக்கீரன் அவர்களும், அழகப்பா பல்கலைக்கழகத் துணை வேந்தர் திரு க.ரவி அவர்களும் வழங்கினர்.
புதுக்கோட்டை கம்பன் கழக நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
