மத்திய கிழக்கு மற்றும் வடமேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவடைந்து கலிங்கப்பட்டினத்திற்கு சுமார் 740 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது.
இது வலுவடைந்து, வடக்கு ஆந்திரா, ஒடிசா மாநிலம் இடையே 26ம் தேதி காலை கரையை கடக்கும்.
இதன் காரணமாக கடலூர், சென்னை, நாகை, தூத்துக்குடி, புதுவை உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் தூர எச்சரிக்கை ஒன்றாம் எண் கூண்டு ஏற்றம்.

