Monday, February 23, 2026
Homeசெய்திகள்கேரளாவில் செவிலியர்கள் போராட்டம்.. போக்குவரத்து முடக்கம்!

கேரளாவில் செவிலியர்கள் போராட்டம்.. போக்குவரத்து முடக்கம்!

கேரளாவில் தனியார் மருத்துவமனை செவிலியர்கள் தங்களின் குறைந்தபட்ச ஊதியத்தை ₹40,000 ஆக உயர்த்தக் கோரி நடத்திய அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சூரில் நடைபெற்ற இந்தப் பிரம்மாண்டப் பேரணியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் வெள்ளை நிறக் கொடிகளுடன் திரண்டு தங்களின் உரிமைகளை முழங்கினர்.

இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முழுமையாக முடங்கியது. ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்டமாகப் பணிகளைப் புறக்கணித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக செவிலியர் சங்கம் (UNA) எச்சரித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments