ரஜினியின் தர்பார் படம் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்த ஜப்பானிய ரசிகர்
ரஜினியின் தர்பார் படம் வெளியான போது, ஒரு ஜப்பானிய ரசிகர் படத்தைப் பார்ப்பதற்காகவே ஜப்பானிலிருந்து சென்னை வந்தார். சரளமாக தமிழில் பேசி ஆச்சர்யம் அளித்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் கடந்த வாரம் ஜப்பானில் வெளியானது. ஜப்பானில் உள்ள தமிழர்களுடன், ரஜினியின் ஜப்பானிய ரசிகர்களும் தர்பார் வெளியானதை கொண்டாடி வருகின்றனர். படம் வெளியாகி ஒருவாரம் ஆன நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பானின் கியோட்டோ, நகோயா, நிகிட்டா ஆகிய பகுதிகளில் தர்பார் கூடுதலாக திரையிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு படமொன்றுக்கு, வெளியான ஒரு வாரம் கழித்து திரையரங்குகளை அதிகரிப்பது சாதனை. அதனை ரஜினி சாதித்திருக்கிறார்.

