Thursday, February 5, 2026
Homeசெய்திகள்சென்னைக்கு அனுப்பப்பட்ட தங்கத் தகடுகளை மீண்டும் கொண்டு வர முடியாது-பி.எஸ்.பிரசாந்த் அறிவிப்பு!

சென்னைக்கு அனுப்பப்பட்ட தங்கத் தகடுகளை மீண்டும் கொண்டு வர முடியாது-பி.எஸ்.பிரசாந்த் அறிவிப்பு!

சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சன்னிதானத்திலிருந்து பழுதுபார்ப்பதற்காக சென்னைக்கு அனுப்பப்பட்ட தங்கத் தகடுகளை மீண்டும் கொண்டு வர முடியாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் தெரிவித்தார். 

 கேரள உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக  அறிக்கை தாக்கல் செய்யப்படும்  என்றும், இந்த விவகாரம் தொடர்பான மறுஆய்வு மனுவும் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள துவார பாலகர்கள் சிலை தங்க தகடுகளால் பொருத்தப்பட்டிருந்தது இது பழுதடைந்திருப்பதால் அதை சரி செய்ய தேவசம்போர்டு சென்னைக்கு அனுப்பி வைத்தது. 

ஆனால் நீதிமன்றத்தின் முறையான அனுமதி இன்றி இது செய்யப்பட்டதால் அனுப்பப்பட்ட தங்கத்தை திரும்ப கொண்டு வருமாறு கோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது

 இதைத் தொடர்ந்து, தேவசம்போர்டு தலைவர் பி எஸ் பிரசாந்த்  கூறுகையில்,  திருவாபரணம் தொடர்பான ஆணையர் தலைமையிலான குழு, நிர்வாக அதிகாரி, நிர்வாக அதிகாரி மற்றும் விஜிலென்ஸ் பிரிவு அதிகாரிகளுடன் சேர்ந்துதான்  இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது.

 இந்த செயல்முறை ஒரு இரசாயன நடவடிக்கையை உள்ளடக்கியது, இதனால் இப்போது அதை மாற்றியமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது. இது   குறித்த அறிக்கை மறுஆய்வு மனுவுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்

அதே நேரத்தில், தேவசம் போர்டுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தவறான தகவல் பிரச்சாரம் பரப்பப்படுவதாகவும் பிரசாந்த் குற்றம் சாட்டினார். 

“நாங்கள் ஏதோ குற்றம் செய்ததாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. சந்திர கிரகணத்தின் போது தங்கம் கடத்தப்பட்டதாக ஆதாரமற்ற வதந்திகள் கூட இருந்தன, எல்லா நடவடிக்கைகள் குறித்து கோரிக்கைகள், வீடியோ ஆவணங்கள் உள்ளிட்டவை அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டது. 

ஆயினும் எங்களை குற்றவாளிகளாக சித்தரிக்க முயற்சிகள் நடக்கிறது. நீதிமன்றம் கூட எங்களை ஒருபோதும் திருடர்கள் என்று அழைத்ததில்லை, ஆனால் நாங்கள்  போல் வேட்டையாடப்படுகிறோம்,” என்று அவர் கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments