Friday, May 22, 2026
Homeசெய்திகள்மு.க. ஸ்டாலினின் பக்குவமான பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம்!

மு.க. ஸ்டாலினின் பக்குவமான பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைமையிலான புதிய அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஏ.எம். ஷாஜஹான் ஆகியோர் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள சூழலில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் மிகவும் முதிர்ச்சியானதொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளான வன்னியரசு மற்றும் ஷாஜஹான் ஆகிய இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள அவர், தங்களின் அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தவொரு கட்சிக்கும் உண்டு என்பதைத் திட்டவட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த நேரத்தில் கழகத் தோழர்கள் யாரும் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்று தனது அன்பு வேண்டுகோளை முன்வைத்துள்ள மு.க. ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள் நாம் என்பதை நினைவூட்டி, நல்லதைப் பாராட்டி அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகத் திமுக செயல்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

கூட்டணி விவகாரத்தில் திமுகவின் மற்ற நிர்வாகிகள் எக்ஸ் தளத்தில் காரசாரமாக மோதி வரும் வேளையில், திமுக தலைவரின் இந்தப் பக்குவமான பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments